திருப்பயணம் -2019
https://saintlawrencebasilica.org/
இந்த வருடம் திருப்பயணமாக வடக்கு கரோலினாவில் Ashville-ல் உள்ள St.Lawrence Basilica -க்கு செல்ல முடிவு செய்தோம். July 13,2019 சனிக்கிழமை ஒரு நாள் பயணம் செல்ல திட்டமிட்டோம். இந்த வருட திருப்பணத்தை திரு. லாசர் அவர்கள் ஒருங்கினைத்து வழங்கினார் .இந்த வருடம் ஆறு குடும்பத்தினர்கள் மொத்தம் 21 உறுப்பினர்கள் இந்த திருப்பயணத்தில் கலந்துக் கொண்டனர்.
அவர்களின் விவரங்கள் கீழே
லாசர் – தீபா குடும்பத்தினர்
சதீஸ் – அனித்தா குடும்பத்தினர்
ஜோன்ஸ் – அவிலா குடும்பத்தினர்
அந்தோணி ஆல்வின் – அன்னா குடும்பத்தினர்
லியோ – சினேகா குடும்பத்தினர்
சவேரியார் – ராணி குடும்பத்தினர்
இருபத்து ஒன்று பேரை ஏற்றி செல்ல தகுந்த வாகனம் இல்லாததால், அவரவர்கள் வாகனத்தில் செல்ல முடிவு செய்தொம். அனைவரும் July 13,2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு st. Michael, Cary ஆலயத்தில் கூடினோம். சிறு செபம் செய்து எங்கள் பயணத்தை தொடங்கினோம் . மதிய உணவிற்கு பிற்பகல் 1 மணிக்கு Hickory,NC ல் உள்ள Henry River Park -ல் கூடினோம். அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தது அறுசுவை உணவை சமைத்து எடுத்து வந்திருந்தார்கள். அங்கு உணவு அருந்திவிட்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு park-லிருந்து கிளம்பினோம்.

மாலை 5 மணிக்கு திருப்பலி இருந்தது. திருப்பலிக்கு முன், ஆலயத்தின் முன் உள்ள அன்னை மரியாள் சிலை முன்பு செபமாலை செய்தொம். செபமாலை முடிந்தவுடன் 5 மணி திருப்பலியில் கலந்துக் கொண்டோம்.
திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தை Mrs.Carol சுற்றி காட்டினார்கள். இந்த ஆலயத்தின் வரலாறை கீழுள்ள link-ல் கொடுத்துள்ளார்கள்.
https://saintlawrencebasilica.org/the-architect




Tour முடிந்தவுடன் சுமார் 7 மணி அளவில் வீட்டை நோக்கி கிளம்பினோம். இடையில் இரவு உணவை அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினோம். இது ஒரு நல்ல பக்தி முயற்சியாக அனைவரும் மகிழ்ந்தாரர்கள். இது அனைவருக்கும் மகிழ்சியாக இறைவன் அருளை பெற உதவும் ஒரு பயனமாக இது அமைந்தது.