2018 Christmas Celebration

ஆக்கம் : அந்தோணி ஜெயராஜ்

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் வருடாந்திர கிறிஸ்துமஸ் பெருவிழா இந்த வருடம் 2018, டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த வருடமும் RTP தமிழ் கத்தோலிக்க சங்கத்தின் பாடகர் குழுவினர், சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களைப் பாடி கிறிஸ்து பிறப்பு பெருவிழா மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
சிறு சிறு குழுக்கள் அமைத்து, விழாவின் பொறுப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் திரு சவேரியார் அவர்களும் திரு ஜெயராஜ் அவர்களும் ஒருங்கிணைத்து தந்தார்கள். குழுக்களின் விவரம்,
உள் மற்றும் வெளி அலங்காரம் – திருமதி. ராணி, திருமதி. தீபா, திரு.ஜோன்ஸ் & திரு. ஆதர்ஷ்;
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு -திருமதி. வித்யா & செல்வி.ஜெசிக்கா;
திருப்பலி ஒருங்கிணைப்பு – திரு. பவுல்;
ஒலி ஒளி அமைப்பு – திரு. ஜோசப்;
கலை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கல் – திருமதி. ரூபா;
இரவு உணவு ஏற்பாடு – திரு. சதீஷ் & திரு. கிங்ஸ்லி;
இருக்கைகள் ஏற்பாடு – திரு. ஜெரார்ட் & திருமதி. ஆக்ஸிலியா;
விழாவிற்கு பின் சுத்தம் செய்தல் – அனைத்து உறுப்பினர்கள்.

விழாவானது பிற்பகல் 3 மணி அளவில் ஆடம்பர பாட்டு திருப்பலியுடன் ஆரம்பமானது. திருப்பலியினை தந்தையர்கள் அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்களும் அருட்பணி பிரவீன் அவர்களும் சிறப்புடன் நடத்தினார்கள். பாடகர் குழுவினர் திருப்பலியில் இனிமையான பாடல்களைப் பாடி பாலன் இயேசுவை போற்றிப் புகழ்ந்தார்கள்.
சிறிய தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கலை நிகழ்ச்சிகள் சங்கத்தலைவர் திரு லாசர் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிகளை திருமதி ரூபா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளும் அவற்றை வடிவமைத்து வழங்கியவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு.
குழந்தைகள் நடித்த கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
இளைஞர்கள் இணைந்து பாடிய கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி. நிர்மலா & திருமதி. கோல்டா.
சிறுவர்களின் பியானோ இசை – ரியா & ரெய்லன் கிங்ஸ்லி .
குழந்தைகளின் நடனம் – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
குழந்தைகளின் கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
இளைஞர்களின் நடனம் – திருமதி. நிர்மலா & திருமதி. கோல்டா.
பெரியவர்கள் இசையோடு இணைந்து பாடிய கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி.
சூசன் & திரு ஜெரார்ட்.
இளைஞர்கள் இசையோடு இணைந்து பாடிய இசை நிகழ்ச்சி – திருமதி. வித்யா.
ஆடை அலங்கார அணிவகுப்பு – திருமதி. நிர்மலா & திருமதி. ராஜி.
ஆண்களின் இசையோடு இணைந்த குழு பாடல் – திரு. சவேரியார் & திரு. ஜெயராஜ்.
பெண்களின் நடனம் – திருமதி நிர்மலா & திருமதி ராஜி.
இளம்பெண்களின் கதம்ப நடனம் – செல்விகள் ஜெசிக்கா, ஹேனா, சாரா & ஷெரின்.
வேதாகம வினாடி வினா நிகழ்ச்சி – திரு. ஜெயராஜ்.

செயலாளர் திரு சவேரியார் அவர்கள் நன்றி கூற கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. அதன் பின் அறுஞ்சுவை விருந்து பரிமாறப்பட்டது. அத்துடன் விழா இனிதாக நிறைவு பெற்றது. இந்த வருட விழாவின் மகிழ்ச்சி தரத்தக்க நிகழ்வு என்னவென்றால் உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து அனைவரும் எல்லா நிகழ்வுகளிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு கலந்து கொண்டார்கள். அருள் தந்தை பிரவீன் அவர்கள் தன் உரையில், அவர் வீட்டையும், நாட்டையும் பிரிந்து வாடியதாகவும், இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் அவர் தன் சொந்த மண்ணுக்கு சென்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் கூறினார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த நிகழ்வுகள் இறைவனால் உந்தப்பட்ட நிகழ்வுகளாகவே நாம் எடுத்துக்கொள்ள முடியும். இதே அர்ப்பணிப்பு உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்

Share your thoughts